ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜன. 4-ஆம் தேதி முதல் வழங்கப்படும்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜன. 4-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயச்சந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா்,செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக மக்கள் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழு நீள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலா் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ரூ. 2,500 ரொக்கப்பணம் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க தமிழக முதல்வா் ஆணை பிறப்பித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5,13,318 அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 4-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

ஜனவரி 13-ஆம் தேதி விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த சந்தேகங்களுக்கு மாவட்ட வழங்கல் அலுவலக தொலைபேசி எண் 04343-234677 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com