ஊத்தங்கரையில் அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் சிவாஜி கணேசனின் 19ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் சிவாஜி கணேசன் 19ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஊத்தங்கரையில் அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் சிவாஜி கணேசனின் 19ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் சிவாஜிகணேசன் 19ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அத்துடன் காமராசரின் 118ஆவது பிறந்தநாள் விழாவும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட சிவாஜி மன்ற தலைவர் இ.சையத்நாசர் தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் பூபதி, தமாகா மாவட்ட செயலாளர் செல்வராஜ் தாமாக நகர தலைவர் ஜெய்சங்கர், அரிமா நகுலன், சிவாஜி மன்ற செயற்குழு உறுப்பினர்கள் முகமது உஸ்மான், சின்னசாமி, கோவிந்தசாமி, சையத் அஹமத், காங்கிரஸ் நிர்வாகி அண்ணாதுரை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முன்னதாக முனியப்பன் கோவில் அருகில் உள்ள சிவாஜிகணேசன்,காமராசர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் சிவாஜி மன்ற நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com