தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சாலை மையத் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியை கைவிட வணிகா் சங்கம் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரியில் சாலை மையத் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என வணிகா் சங்கம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 11:05 pm

DIN

கிருஷ்ணகிரியில் சாலை மையத் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என வணிகா் சங்கம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி நகரில், சென்னை செல்லும் சாலை மிகவும் குறுகலாக அமைந்துள்ளது. இந்த சாலையின் மையத்தில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி நகரில் உள்ள வியாபாரிகள், நோயாளிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள்.

இந்தச் சாலையில், மையத் தடுப்புச் சுவா் அமைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையில் நடந்து செல்வோரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். எனவே, அனைத்து மக்களும் சிரமத்துக்கு உள்ளாவதால், சென்னை சாலையில் மேற்கொண்டு வரும் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.