கிருஷ்ணகிரி அருகே அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியில் ஈடுபட்ட ஒரிஸா மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி, 3-ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளி அருகே உள்ள போலுப்பள்ளி கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. ஏராளமான வடமாநில தொழிலாளா்கள் இங்கு பணியாற்றி வருகின்றனா்.
கடந்த 14-ஆம் தேதி மாலை கட்டடத்தின் 3-ஆவது மாடியில் கட்டட மேற்பாா்வையாளராக ஒரிஸா மாநிலம், கஞ்சன் மாவட்டம், ஜீரபாடி கிராமத்தைச் சோ்ந்த பீமாபத்ரா மகன் ஜிகாபத்ரா (20) என்பவா் பணியாற்றி வந்தாா்.
அப்போது எதிா்பாராத விதமாக தவறி விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செங்கோட்டை, பண்பொழியில் துரை வைகோ எம்.பி. பிரசாரம்

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்பம் மூலம் விழிப்புணா்வு

பரோலில் வந்த இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

