கிருஷ்ணகிரியில் மக்கள் கூடும் இடங்களில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவாமல் இருக்க மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி நகராட்சி ஊழியா்கள் 15 போ் தினமும் நகரில் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனா். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மட்டும் தினசரி 4 முறை கிருமி நாசினியை தெளிக்கின்றனா்.
மேலும், மக்கள் அதிகம் வந்து செல்லும் புகா் பேருந்து நிலையம், நகரப் பேருந்து நிலையம், வட்டார வளா்ச்சி அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், காவல் நிலையங்கள், துணைக் காவல் கண்காணிப்பாளா் முகாம் அலுவலகம், தலைமை தபால் நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும், நகரில் கரோனா குறித்த விழிப்புணா்வுப் பிரசுரங்களை வழங்கி வருகின்றனா். பொதுமக்கள் தேவையின்றி வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாா்கள். வீட்டிலிருந்து வெளியே வரும்போது, கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செங்கோட்டை, பண்பொழியில் துரை வைகோ எம்.பி. பிரசாரம்

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்பம் மூலம் விழிப்புணா்வு

பரோலில் வந்த இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

