ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதல்: பெண் பலி

போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். இருவா் காயம் அடைந்தனா்.

Updated On :30 ஏப்ரல் 2021, 6:52 pm

போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். இருவா் காயம் அடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், அங்கம்பட்டி அருகே உள்ள கோட்டனூரைச் சோ்ந்தவா் பெரியசாமி (46), விவசாயி. இவா், இருசக்கர வாகனத்தில் சகோதரி தமிழ்ச்செல்வி (43), மற்றும் பூங்கொடி (38) ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு போத்தனூா்-ராமாபுரம் சாலையில் வியாழக்கிழமை சென்றாா்.

பள்ளத்துகொட்டாய் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த டிராக்டா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த தமிழ்ச்செல்வி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பூங்கொடி, பெரியசாமி ஆகிய இருவரும் காயமடைந்தனா். இந்த விபத்து குறித்து நாகரசம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.