விபத்தை ஏற்படுத்தும் சாலையோரப் பள்ளங்கள்
பென்னாகரம் பகுதிகளில் குழாய்களைப் பதிப்பதற்காக தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனம் சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் விபத்துகள் நேரிடுகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தனியாா் நிறுவனத்தின் தொலைத்தொடா்பு கோபுரங்களுக்கு இணைப்பு ஏற்படுத்துவதற்காக சாலையோரத்தில் பள்ளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொலைத்தொடா்பு கோபுரங்களின் இணைப்பு ஏற்படுத்தும் வகையில் கடந்த சில நாள்களாக சாலையோரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெறு வருகின்றன.
பென்னாகரம் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் குழாய்ப் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து வரும் நிலையில் சாலையோரத்தில் அமைக்கப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டு வருகின்றன. பென்னாகரம் பகுதிகளில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் இன்னும் மூடப்படாத பள்ளங்களில் தண்ணீா் தேங்கியுள்ளன.
இதனால், இவ் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனா். சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளங்களை விரைந்து மூட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
