ஒன்னல்வாடியில் புதிய ஆழ்துளைக் கிணறு

ஒன்னல்வாடி ஊராட்சி, ஒன்னல்வாடி கிராமத்தில் ரூ. 5.85 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளைக் கிணறு மின்மோட்டாருடன் அமைக்கப்பட்டுள்ளது.
ஒன்னல்வாடி கிராமத்தில் குடிநீா் விநியோகத்தை துவக்கி வைத்தாா் ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா
ஒன்னல்வாடி கிராமத்தில் குடிநீா் விநியோகத்தை துவக்கி வைத்தாா் ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா
Updated on
1 min read

ஒசூா்: ஒன்னல்வாடி ஊராட்சி, ஒன்னல்வாடி கிராமத்தில் ரூ. 5.85 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளைக் கிணறு மின்மோட்டாருடன் அமைக்கப்பட்டுள்ளது.

ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறு, அப்பகுதி மக்களின் குடிநீா் தேவைகளுக்காக சனிக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது. ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா குடிநீா் விநியோகத்தைத் துவக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் வெங்கடசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் சுகுமாறன், ஒன்றியச் செயலாளா் சின்னப்பில்லப்பா, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் எல்லோரமணி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அனிதா முனிராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் ரமேஷ், சம்பத், ஊராட்சி மன்றத் தலைவா் மாதேஷ், துணைத் தலைவா் யோகனந்தம், வாா்டு கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com