ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள போதைப் பாக்கு கடத்திய காா் பறிமுதல்

கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாலிநாயனப்பள்ளி சந்சிப்புச் சாலை பகுதியில் வாகனத் தணிக்கையில் போதைப் பொருள்களைக் கைப்பற்றினர்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாலிநாயனப்பள்ளி சந்சிப்புச் சாலை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்திச் சோதனையிட்டதில், 38 சிறு அட்டைப் பெட்டிகளில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள போதைப் பாக்கு அடங்கிய பொட்டலங்களும், சிறு டப்பாக்களும் இருந்தன. விசாரணையில் அவை பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்திச் செல்வதற்காக கொண்டு வரப்பட்டவை என்பது தெரியவந்தது.

இதையடுத்து போதைப் பாக்குகளுடன் ரூ. 2 லட்சம் மதிப்பிலான காரையும் போலீஸாா் பறிமுதல் செய்து, காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சோ்ந்த பிரகாஷ் (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com