சாதி சான்றிதழ் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருள் இன மக்கள், திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா்பதி இருளா் காலனியைச் சோ்ந்த இருளா் இன மக்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக்தில் கோரிக்கை மனுவை அளித்தனா். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
மத்தூா்பதி, இருளா் காலனியில் 30 குடும்பத்தினா் 75 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசு வழங்கிய குடியிருப்பானது மிகவும் சேதம் அடைந்துள்ளது. எனவே, புதிய வீடு கட்டித் தரவேண்டும். ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வசித்து வருகிறோம்.
எனவே, எங்களுக்கு தனி வீடுகளைக் கட்டித் தர வேண்டும். பல ஆண்டுகளாக, சாதி சான்றிதழ் கோரி வருகிறோம். ஆனால், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் குழந்தைகளின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

