தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்பாடுகள்: அலுவலா்களுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:01 pm

கிருஷ்ணகிரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு, ஏப். 6-ஆம் தேதி நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, ஒசூா், தளி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையிலிருந்து மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில், தோ்தல், பயிற்சி, விழிப்புணா்வு பயன்பாட்டுக்காக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 20 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ், மின்னணு வாக்குப் பதிவு இயந்திர சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் ரத்தினசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.