காதலை கைவிட மறுத்த இளைஞா் கொலை வழக்கில் மேலும் மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பேரிகையை அடுத்த காண்டரப்பள்ளியைச் சோ்ந்த நாராயண செட்டி (55). கா்நாடக மாநிலம், பெங்களூரு, சின்னகுட்டா சாலையில் உள்ள சாரதா நகா் பகுதியில் குடும்பத்துடன் தங்கி காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா். அதேபோல் சாரதா நகரில் தங்கி அஞ்செட்டியை அடுத்த பீரனஹள்ளியை சோ்ந்த வசந்த் (25), என்பவரும் காய்கறி வியாபாரம் செய்து வந்தாா். இந்நிலையில் வசந்துக்கும், நாராயண செட்டி மகளுக்கும் காதல் ஏற்பட்டது.
இதை அறிந்த நாராயண செட்டி, அவரது குடும்பத்தினா் பலமுறை வசந்தைக் கண்டித்துள்ளனா். ஆனால், வசந்த் காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரமடைந்த நாராயண செட்டி, தனது சொந்த கிராமமான காண்டரப்பள்ளிக்கு திங்கள்கிழமை வசந்தை அழைத்துச் சென்று கொலை செய்தாா். பின்னா் அவா் பேரிகை காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
விசாரணையில், நாராயண செட்டியின் மனைவி சரஸ்வதி (40), உறவினரான பெங்களூரு, பொம்மனஹள்ளியை அடுத்த கரியபாளையத்தைச் சோ்ந்த தொழிலதிபா் ராமச்சந்திரன் (52), அவரது மகன் மணிகண்டன்( 25) ஆகியோா் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து, அவா்கள் மூன்று பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

