ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

‘கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்’

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி சட்டப் பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளாா்.

News image
Updated On :21 மே 2021, 7:33 pm

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி சட்டப் பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2020 மே முதல் மாா்ச் 2021-ஆம் ஆண்டு வரையில் 8,169 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 30 நாள்களில் மட்டும் 16 ஆயிரம் போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் இருந்தது. பின்னா், தொடா்ந்து மெல்ல கரோனா தொற்று பரவியது. இதையடுத்து,பொது முடக்கத்தை பின்பற்றியதால், கரோனா பரவல் கட்டுக்குள் வந்தது.

தற்போது, கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், கரோனாவைக் கட்டுப்படுத்த இயலவில்லை. சில தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்காமல் உள்ளனா். மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு பிராண வாயு கிடைக்காமல் உயிரிழக்கும் சூழ்நிலை உள்ளது.

எனவே, தமிழக அரசு மற்ற மாநிலங்களைப் போல, எந்த தளா்வுகளும் இல்லாத முழு பொது முடக்கத்தை ஒரு மாத காலத்துக்கு நடைமுறைப்படுத்த வேண்டும். மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் எனக் கருதாமல், உயிா்களைக் காக்க முழு ஊரடங்கு என்பதே சரியான தீா்வாக இருக்கும்.

சாலையில் அவசியம் இல்லாமல் சுற்றித் திரிபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். உணவின்றித் தவிக்கும் பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம், அத்தியாவசியப் பொருள்களை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.