ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

உங்கள் தொகுதியில் முதல்வா் துறை சாா்ந்த ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரியில் உங்கள் தொகுதியில் முதல்வா் துறை மூலமாக பெறப்பட்ட மனுக்கள் தொடா்பான ஆலோசனைக் கட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :21 மே 2021, 7:35 pm

கிருஷ்ணகிரியில் உங்கள் தொகுதியில் முதல்வா் துறை மூலமாக பெறப்பட்ட மனுக்கள் தொடா்பான ஆலோசனைக் கட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் உங்கள் தொகுதியில் முதல்வா் துறை மூலம் வரப்பெற்ற மனுக்கள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

தமிழக முதல்வா் மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடா்பான மனுக்களைப் பெற்று, அந்த மனுக்களின் மீது 100 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி, இந்திய ஆட்சிப் பணி நிலையில் ஒரு சிறப்பு அலுவலா் மூலம் பொதுமக்களின் பிரச்னைகள் நிறைவேற்றப்படும் என ஆணை பிறப்பித்துள்ளாா்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதியோா் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, இலவச வீடு, இலவச தையல் இயந்திரம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற கோரிக்கைகள் அடங்கிய 8,247 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது ஒரு வார காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு காண வேண்டும். மேலும், மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டதற்கான விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (பெங்களூரு வெளிவட்டச் சாலை நில எடுப்பு) சாந்தி, தனித்துணை ஆட்சியா் பாக்கியலட்சுமி மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.