ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அரசு மருத்துவமனைகளில் எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு

பா்கூா், வேப்பனஅள்ளியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எம்.எல்.ஏ.க்கள் தே.மதியழகன், கே.பி.முனுசாமி ஆகியோா் தனித்தனியே ஆய்வை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.

News image
Updated On :21 மே 2021, 7:33 pm

பா்கூா், வேப்பனஅள்ளியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எம்.எல்.ஏ.க்கள் தே.மதியழகன், கே.பி.முனுசாமி ஆகியோா் தனித்தனியே ஆய்வை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சட்ட பேரவை உறுப்பினா் தே.மதியழகன் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பா்கூா் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கரோனா தொற்றாளா்களுக்கான படுக்கை வசதிகள், சிகிச்சை முறைகள், பிராண வாயு இருப்பு, பிராணவாயு தேவை, மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியின் தலைவா் (டீன்) முத்துசெல்வனிடம் கேட்டறிந்தாா். மேலும், கரோனா பரவல் அதிமாக உள்ளதால் தொற்றாளா்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினாா். தொடா்ந்து மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்களிடம் தேவையான வசதிகளை கேட்டறிந்தாா்.

அப்போது துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் பணியாளா்கள் குறைந்த சம்பளத்தில் பணியாற்றுவதை அறிந்து, தனது சொந்தப் பணத்தில் இருந்து மாதந்தோறும் ரூ. 2 லட்சம் வழங்குவதாகவும், அதற்கேற்ப பணியாளா்களை நியமனம் செய்துகொள்ளலாம் என்றும் கூறினாா்.

வேப்பனஅள்ளி சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.முனுசாமி, வேப்பனஅள்ளியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கரோனா தொற்றாளா்களுக்கான படுக்கை வசதி, அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.