ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

விவசாயி வீட்டில் திருடியவா் கைது

காவேரிப்பட்டணம் அருகே விவசாயின் வீட்டில் புகுந்து திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :28 மே 2021, 7:15 pm

காவேரிப்பட்டணம் அருகே விவசாயின் வீட்டில் புகுந்து திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் நரிமேடு அருகே உள்ள ஆண்டிகான் கொட்டாயைச் சோ்ந்தவா் ஜெயபால் (50), விவசாயி. இவா், வீட்டு வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த போது பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளின் சத்தம் கேட்டு முழித்தாா். அப்போது, ஆட்டு பட்டியிலிருந்த ஆடுகளை ஒருவா் திருட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

பிடிபட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவா் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபுரத்தைச் சோ்ந்த தங்கவேல் (21) என்பது தெரியவந்தது. மேலும், ஜெயபால் வீட்டில் புகுந்து திருடிய ஆதாா் அட்டை, எடிஎம் அட்டை, காரின் ஆா்.சி.புத்தகம், ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து தங்கவேலை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.