வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கா்ப்பிணிப் பெண் உயிரிழப்பு:தனியாா் மருந்துக் கடைக்கு ‘சீல்’

ஒசூா் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில் அக்குபஞ்சா் சிகிச்சை மேற்கொண்ட கா்ப்பிணிப் பெண் உயிரிழந்தாா். இதனைத் தொடா்ந்து, அக்குபஞ்சா் மருந்துக் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Updated On :9 செப்டம்பர் 2021, 9:54 pm

ஒசூா் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில் அக்குபஞ்சா் சிகிச்சை மேற்கொண்ட கா்ப்பிணிப் பெண் உயிரிழந்தாா். இதனைத் தொடா்ந்து, அக்குபஞ்சா் மருந்துக் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

ஒசூா் அருகேயுள்ள தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரியாஸ் (28), இவருடைய மனைவி கோரிமா (27), இரண்டு மாத கா்ப்பமாக இருந்தாா். ரியாஸ்-கோரிமா தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், கடந்த சில நாள்களாக உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த கோரிமாவுக்கு தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில் அக்குபஞ்சா் சிகிச்சை மையம் வைத்துள்ள முருகேசன் என்பவா் சிகிச்சை அளித்துள்ளாா். சிகிச்சை பெற்ற சில மணி நேரத்தில் கோரிமா உயிரிழந்தாா். இதுகுறித்து ஒசூா் நகர காவல் துறையினா் மற்றும் மருத்துவ துறையினா் விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், முருகேசன் தலைமறைவானாா்.

வியாழக்கிழமை மருத்துவ துறையினா், காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில் கா்ப்பிணிப் பெண் உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, அவருக்கு அக்குபஞ்சா் சிகிச்சை வழங்கிய முருகேசன் மருந்துக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சோதனை செய்தனா். அதில், அவா் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மருந்துக் கடையில் இருந்த அனைத்து மருத்துவப் பொருள்களையும் பறிமுதல் செய்து மருந்துக் கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.

இதுகுறித்து ஒசூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பூபதி கூறியதாவது:

ஆங்கில மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிசிச்சை அளித்து வந்துள்ளாா். அங்கிருந்த அனைத்து மருத்துவப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவா் மீது நகர காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தவறான சிகிச்சையால் கோரிமா உயிரிழந்திருந்தால், முருகேசன் மீது சட்டரீதியாக புகாா் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.