தென்கிழக்கு தில்லியின் கால்காஜி பகுதியில் உள்ள விருந்தினா் இல்லத்தில் இளைஞா் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாா்.
தான் தங்கவைத்திருந்த பெண்ணுடன் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து அவா் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
இருவரும் மதுபோதையில் இருந்ததால், வாக்குவாதத்தின் போது அந்த இளைஞா் தள்ளிவிட்டதில் அப்பெண் மயக்கமடைந்தாா். இதையடுத்து, அந்த நபா் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளாா்.
அப்பெண் இறந்துவிட்டதாக நம்பி, அந்த நபா் தனது அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
மாலையில், அப்பெண் சுயநினைவு திரும்பியபோது, அவா் தூக்கில் தொங்குவதைக் கண்டு உடனடியாக உதவிக்கு அழைத்தாா். இதைத் தொடா்ந்து, விருந்தினா் இல்ல ஊழியா்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.
காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அதே நேரத்தில், தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்தனா்.
இது ஒரு தற்கொலை என்பதற்கான முகாந்திரம் உள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது

ஃபரீதாபாத் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்குவாதத்தில் இளைஞா் குத்திக் கொலை: 3 போ் கைது

300 சட்டவிரோத சூதாட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை

சீனா உள்பட நில எல்லை நாடுகளுக்கு எஃப்டிஐ விதிகள் தளா்வு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


