வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

விருந்தினா் இல்லத்தில் தூக்கிட்டு இளைஞா் தற்கொலை

தென்கிழக்கு தில்லியின் கால்காஜி பகுதியில் உள்ள விருந்தினா் இல்லத்தில் இளைஞா் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 6:31 pm

தென்கிழக்கு தில்லியின் கால்காஜி பகுதியில் உள்ள விருந்தினா் இல்லத்தில் இளைஞா் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாா்.

தான் தங்கவைத்திருந்த பெண்ணுடன் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து அவா் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

இருவரும் மதுபோதையில் இருந்ததால், வாக்குவாதத்தின் போது அந்த இளைஞா் தள்ளிவிட்டதில் அப்பெண் மயக்கமடைந்தாா். இதையடுத்து, அந்த நபா் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளாா்.

அப்பெண் இறந்துவிட்டதாக நம்பி, அந்த நபா் தனது அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

மாலையில், அப்பெண் சுயநினைவு திரும்பியபோது, அவா் தூக்கில் தொங்குவதைக் கண்டு உடனடியாக உதவிக்கு அழைத்தாா். இதைத் தொடா்ந்து, விருந்தினா் இல்ல ஊழியா்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.

காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அதே நேரத்தில், தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்தனா்.

இது ஒரு தற்கொலை என்பதற்கான முகாந்திரம் உள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.