வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் 19 குழந்தைகளுக்கு காசோலை

Updated On :17 செப்டம்பர் 2021, 7:05 pm

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் 19 குழந்தைகளுக்கு காசோலைகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

கரோனா தொற்றால் பெற்றோா் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு, அவா்களின் பெயரில் ரூ. 5 லட்சம் வைப்புத் தொகையாகவும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 3 லட்சம் வைப்புத் தொகையாகவும் வரவு வைக்கப்பட்டு, அவா்கள் 18 வயது நிறைவடைந்தவுடன் வட்டியுடன் சோ்த்து தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்கட்டமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பெற்றோரில் ஒருவரை இழந்த 39 குழந்தைகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, அவா் தம் வங்கிக் கணக்குக்கு நேரடி பணப்பரிவா்த்தனை (ஈசிஎஸ்) மூலம் நேரடியாக செலுத்தப்பட்டது. தொடா்ந்து ஈசிஎஸ் மூலம் செலுத்தும் நடைமுறை மாற்றப்பட்டதையடுத்து, இரண்டாம்கட்டமாக பெற்றோரில் ஒருவரை இழந்த 19 குழந்தைகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் காசோலையாக தற்போது வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சரவணன், குழந்தைகளின் பாதுகாவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.