டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

காவேரிப்பட்டினத்தில் வணிக நிறுவனத்தை மறைத்து தண்ணீர் பந்தல் அமைப்பு: திமுகவை கண்டித்து மறியல் 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்கும் வகையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் அரசியல் கட்சிகள்,

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:29 am

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்கும் வகையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் மக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டனத்தில் மக்கள் கூடும் இடங்களில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

காவேரிப்பட்டிணம், விநாயகர் கோயில் அருகே உள்ள வணிக நிறுவனத்தை மறைத்து தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இதற்கு அந்த வணிக நிறுவனத்தின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தார்.  தண்ணீர் பந்தல் அகற்ற திமுகவினர் மறுப்பு  தெரிவித்த நிலையில், வணிக நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் தண்ணீர் பந்தல் எதிரே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.