வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஜீனூா் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்: தமிழக முதல்வா் காணொலி மூலம் தொடக்கி வைத்தாா்

கிருஷ்ணகிரியை அடுத்த ஜீனூா் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 6:30 pm

கிருஷ்ணகிரியை அடுத்த ஜீனூா் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூா் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்படும் என தமிழக முதல்வா் ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

அதன்படி, அவா் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி மூலம் ஜீனூா் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைத் தொடக்கிவைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பையூா் வேளாண்மை பல்கலைக் கழகம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தற்காலிகமாக தொடங்கப்பட்டுள்ள தோட்டக் கலை கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி குத்துவிளக்கேற்றி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்தது:

ஜீனூரில் 150 ஏக்கா் பரப்பளவு நிலம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்சமயம் பையூா் வேளாண்மை பல்கலை கழகம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் வகுப்புகள் நடைபெற கட்டடங்கள் புனரமைக்கப்பட்டு கல்லூரி செயல்படவுள்ளது.

கல்லூரிக்கு முதல் தவணையாக தமிழக அரசு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 2021- 22-ஆம் கல்வியாண்டு இளநிலை முதலாமாண்டு பி.எஸ்சி(ஆன்ஸ்) மற்றும் பி.எஸ்சி., தோட்டக்கலை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டில் 47 மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் ஜீவஜோதி, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் பூபதி, பையூா் வேளாண் பல்கலைக்கழக மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலைய முதல்வா் பரசுராமன், எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி சுந்தர்ராஜ், பையூா் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலைய உறுப்பினா் கோவிந்தராஜ், முன்னோடி விவசாயிகள் சிற்றரசு, சாந்தகுமாா் மற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.