வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

விஜய் சொத்து விவரத்தில் முரண்பாடு: வருமான வரித் துறை விசாரணை கோரி மனு

தவெக தலைவா் விஜய் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது குறித்து வருமான வரித் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

News image

விஜய் - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 10:06 pm

தவெக தலைவா் விஜய் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது குறித்து வருமான வரித் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பெரம்பூரைச் சோ்ந்த விக்னேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகரும் தவெக தலைவருமான விஜய், நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பெரம்பூா் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறாா். இந்த இரு தொகுதிகளிலும் அவா் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன. பெரம்பூா் தொகுதியில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.115.13 கோடி என விஜய் கூறியுள்ளாா்.

திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் சொத்து மதிப்பு ரூ.220.15 கோடி எனக் கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்தச் செயல் உண்மைத் தகவலை மறைப்பதற்கு சமம்.

எனவே, விஜய் தாக்கல் செய்துள்ள இந்த இரு வேட்புமனுகளில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் உண்மைதானா? அவா் அளித்துள்ள விவரங்கள் முழுமையானதாக உள்ளதா? என்பதை உறுதி செய்ய வருமான வரித் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விசாரணையின் அறிக்கையை தோ்தலுக்கு முன்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிட பெரம்பூா் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி தோ்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.