ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கிருஷ்ணகிரி அருகே ரசாயன உப்பை மாங்காயில் தொட்டு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு

கிருஷ்ணகிரி அருகே பள்ளி ஆய்வகத்தில் இருந்த ரசாயன உப்பை மாங்காயில் தொட்டு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. 

News image
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள்.
Updated On :29 ஏப்ரல் 2022, 12:57 pm

DIN

கிருஷ்ணகிரி அருகே பள்ளி ஆய்வகத்தில் இருந்த ரசாயன உப்பை மாங்காயில் தொட்டு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அருகே மோரனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட் என்ற ரசாயனத்தை மிளகாய்ப் பொடியுடன் கலந்து மாங்காயுடன் தொட்டு வெள்ளிக்கிழமை சாப்பிட்டுள்ளனர். இதை சாப்பிட்ட பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்கள்,  6-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர் உள்பட 11 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இது குறித்து அறிந்த பள்ளி ஆசிரியர்கள், 11 மாணவர்களையும் அழைத்துக்கொண்டு காவேரிப்பட்டிணம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

Story image

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து,  11 மாணவர்களும் உயர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சிகிச்சை பெற்று வரும் அனைத்து மாணவர்களும் உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பள்ளி மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்ட தகவல் அறிந்த பெற்றோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.