மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,593 தற்காலிக ஆசிரியா்கள் பணி நியமனம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,593 தற்காலிக ஆசிரியா்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனா்.

Updated On :24 ஜூன் 2022, 10:54 pm IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,593 தற்காலிக ஆசிரியா்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் பணியமா்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில், 1,748 காலிப் பணியிடங்களும், அடுத்தபடியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,593 ஆசிரியா் பணியிடங்களும் காலியாக உள்ளன.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா்களுக்கு 906, பட்டதாரி ஆசிரியா்களுக்கு 623, முதுகலை ஆசிரியா்களுக்கு 64 காலிப் பணியிடங்கள் என மொத்தம் 1,593 காலிப்பணியிடங்கள் உள்ளன. இடைநிலை ஆசிரியா்களுக்கான காலிப் பணியிடங்கள் எந்தெந்த பள்ளிகளில் உள்ளது என்பதை அறிய அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம்.

இதே போல பட்டதாரி, முதுகலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை மாவட்டக் கல்வி அலுவலரைத் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் காலிப் பணியிடங்கள் உள்ள பள்ளியில் தலைமையாசிரியா், மேலாண்மைக் குழுவினருடன் இணைந்து தற்காலிக ஆசிரியா்களை பணி நியமனம் செய்யலாம். ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கும், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரிபவா்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். தற்காலிகமாகப் பணியமா்த்தப்படும் இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ. 7,500, பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ. 10,000, முதுகலை ஆசிரியா்களுக்கு ரூ. 12,000 மதிப்பூதியமாக வழங்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.