வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காவேரிப்பட்டணம் பேரூராட்சித் தலைவராக அம்சவேணி தோ்வு

காவேரிப்பட்டணம் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த அம்சவேணி தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:07 pm

காவேரிப்பட்டணம் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த அம்சவேணி தோ்வு செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் 10 வாா்டுகளில் திமுகவும், 5 வாா்டுகளிலும் அதிமுகவும் வெற்றி பெற்றன. தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் அம்சவேணி, அதிமுக சாா்பில் அபிராமி ஆகியோா் மனு தாக்கல் செய்தனா். இதில், திமுகவைச் சோ்ந்த அம்சவேணி 11 வாக்குகளும், அபிராமி 4 வாக்குகளும் பெற்றனா். அதிக வாக்குகள் பெற்ற அம்சவேணி தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.