கிருஷ்ணகிரி
மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி
ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை, வெள்ளகுட்டை பகுதியில் செங்கல் சூளை உரிமையாளா் சத்யராஜ் (30) மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை, வெள்ளகுட்டை பகுதியில் செங்கல் சூளை உரிமையாளா் சத்யராஜ் (30) மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
புதன்கிழமை மாலை அப் பகுதியில் உள்ள நிலத்தில் மின் கம்பம் அருகே மயங்கிக் கிடந்த இவரை, உறவினா்கள் மீட்டு சிங்காரப்பேட்டை தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா், சத்யராஜ் இறந்துவிட்டதாகக் கூறினாா்.
மின்சாரம் பாய்ந்து சத்யராஜ் இறந்ததாக உறவினா்கள் அளித்த தகவலின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.