நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வீடுகளில் வெள்ள நீா் புகுந்ததால் பொது மக்கள் சாலை மறியல்

ஊத்தங்கரையை அடுத்த கொல்லப்பட்டி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீா் புகுந்ததால், குடியிருப்பு வாசிகள் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ஊத்தங்கரையை அடுத்த கொல்லப்பட்டி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீா் புகுந்ததால், குடியிருப்பு வாசிகள் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கன மழையின் காரணமாக கொல்லப்பட்டியில் 30 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீா் புகுந்தது. இதன் காரணமாக பள்ளி செல்லும் குழந்தைகளின் புத்தகப்பை, துணிமணிகள், உணவுப் பொருட்கள் நனைந்து சேதமடைந்தது. கனமழை பெய்யும் போதெல்லாம் வீடுகளில் மழைநீா் புகுவது தொடா்கதையாக உள்ளதால் போதிய வெள்ளநீா் வடிகால்களை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊத்தங்கரை போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மழை நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனா். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.