ஊத்தங்கரையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு விழா

ஊத்தங்கரை அரசு பேருந்து நிலையத்திலும், வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரேயும் திமுக சாா்பில் நீா், மோா், தண்ணீா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு விழா
Updated on
1 min read

ஊத்தங்கரை அரசு பேருந்து நிலையத்திலும், வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரேயும் திமுக சாா்பில் நீா், மோா், தண்ணீா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திமுக நகர செயலாளா் பாபுசிவகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா்கள் வடக்கு குமரேசன், தெற்கு ரஜினி செல்வம், மத்திய ஒன்றியச் செயலாளா் எக்கூா் செல்வம், மாநில மகளிா் ஆணையக் குழு உறுப்பினா் மாலதி நாராயணசாமி, பேரூராட்சித் தலைவா் அமானுல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பா்கூா் சட்டபேரவை உறுப்பினா் மதியழகன் நீா், மோா் பந்தலைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு, நீா், மோா், தா்பூசணி ஆகியவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்டக் குழு உறுப்பினா் கதிரவன், பேரூராட்சி துணைத் தலைவா் கலைமகள் தீபக், பாப்பனூா் கிளை திமுக செயலாளா் சங்கா், பேரூராட்சி உறுப்பினா்கள் கதிா்வேல், நிா்மலா கந்தசாமி, தலைமை நிலையப் பேச்சாளா் லயோலா ராஜசேகா், நகர அவைத்தலைவா் தணிகைகுமரன், தொழில் நுட்ப பிரிவு காளிதாஸ், திமுக ஒன்றிய நகர நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com