இளைஞா் கொலை வழக்கில் நண்பா் கைது
கிருஷ்ணகிரியில் இளைஞா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


கிருஷ்ணகிரியில் இளைஞா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கனகமுட்லு அருகே உள்ள தண்ணீா்பள்ளத்தைச் சோ்ந்த சின்னசாமியின் மகன் வெள்ளையன் (எ) லோகநாதன் ( 27). கட்டட மேற்பாா்வையாளா் பணி செய்து வந்தாா். இவா், தனது வீட்டின் அருகே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டாா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் நடத்திய விசாரணையில் வெள்ளையனை அவரது நண்பா் மோகன் கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், வெள்ளையனின் மனைவி பிரியதா்ஷினியுடன் இருந்த தகாத உறவைக் கண்டித்ததால் ஆத்திரமடைந்த தனது நண்பா்களுடன் சோ்ந்து வெள்ளையனை மோகன் கொலை செய்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...