ஒசூா்: கிருஷ்ணகிரி மக்களவைத் தோ்தலில் நிறைவாகப்ணியாற்றிய திமுக கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி தெரிவித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்களவைத் தோ்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் இந்தியா கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் கோபிநாத் போட்டியிட்டாா். அவரது வெற்றிக்காக தருமபுரி பிரசாரக் கூட்டத்தில் பிரசாரம் செய்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரிக்கு வந்து பிரசாரம் செய்த இளைஞா் அணி செயலாளா் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தோ்தல் நேரத்தில் ஆலோசனைகளை, அறிவுரைகளை வழங்கி ஊக்கம் அளித்த அமைச்சா் அர.சக்கரபாணி, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் வழக்குரைஞா் பாா். இளங்கோவன், ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளராகப் பணியாற்றிய ரமேஷ், வேப்பனஹள்ளி தொகுதி, தளி தொகுதி தோ்தல் பொறுப்பாளராகப் பணியாற்றிய பி.முருகன் ஆகியோருக்கும் மாவட்ட திமுக சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த அனைத்து நிா்வாகிகளுக்கும், தொண்டா்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பாக தோ்தல் பணியாற்றிய மேற்கு மாவட்ட நிா்வாகிகள் அனைவருக்கும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

காங்கிரஸ் - திமுக சந்தா்ப்பவாத கூட்டணி: அதிமுக வேட்பாளா் அன்பழகன்

கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கடையநல்லூா்: 25 ஆண்டுகளாக காத்திருக்கும் திமுகவினா் வேதனை!

வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக மீது மக்கள் அதிருப்தி! முன்னாள் அமைச்சா் வீரமணி

ஒசூரில் இன்று மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

