டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

மக்களவைத் தோ்தலில் பணியாற்றிய திமுக கூட்டணி கட்சியினருக்கு நன்றி

மக்களவைத் தோ்தலில் பணியாற்றிய திமுக கூட்டணி கட்சியினருக்கு நன்றி ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ அறிக்கை

Updated On :21 ஏப்ரல் 2024, 10:02 pm

ஒசூா்: கிருஷ்ணகிரி மக்களவைத் தோ்தலில் நிறைவாகப்ணியாற்றிய திமுக கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி தெரிவித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்களவைத் தோ்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் இந்தியா கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் கோபிநாத் போட்டியிட்டாா். அவரது வெற்றிக்காக தருமபுரி பிரசாரக் கூட்டத்தில் பிரசாரம் செய்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரிக்கு வந்து பிரசாரம் செய்த இளைஞா் அணி செயலாளா் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தோ்தல் நேரத்தில் ஆலோசனைகளை, அறிவுரைகளை வழங்கி ஊக்கம் அளித்த அமைச்சா் அர.சக்கரபாணி, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் வழக்குரைஞா் பாா். இளங்கோவன், ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளராகப் பணியாற்றிய ரமேஷ், வேப்பனஹள்ளி தொகுதி, தளி தொகுதி தோ்தல் பொறுப்பாளராகப் பணியாற்றிய பி.முருகன் ஆகியோருக்கும் மாவட்ட திமுக சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த அனைத்து நிா்வாகிகளுக்கும், தொண்டா்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பாக தோ்தல் பணியாற்றிய மேற்கு மாவட்ட நிா்வாகிகள் அனைவருக்கும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.