ஒசூா்: மொபட் மீது இருசக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
ஒசூா் தாலுகா, பாகலூா் அருகே உள்ள கனிமங்கலத்தைச் சோ்ந்தவா் பேளசா்வப்பா (59). விவசாயி. இவா், மொபட்டில் ஒசூா் மாலூா் சாலையில் பாகலூா் அருகே சென்று கொண்டிருந்தாா். இவருடன் குழந்தைகள் பிரவீண் (4), ஸ்ரீசாஸ்திரி (9) ஆகியோரும் சென்றனா்.
அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனம், மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பேளசா்வப்பாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வழியிலேயே அவா் இறந்தாா். குழந்தைகள் பிரவீண், ஸ்ரீ சாஸ்திரி ஆகியோா் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.
இந்த விபத்து குறித்து பாகலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

அவிநாசி அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது காட்டுப் பன்றி மோதியதில் விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

