ஒசூரில் பாகலூா் சாலையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்ட குழாய் உடைந்து  வீணாக வெளியேறும் குடிநீா்.
ஒசூரில் பாகலூா் சாலையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்ட குழாய் உடைந்து வீணாக வெளியேறும் குடிநீா்.

ஒசூரில் குழாய் உடைந்து வீணாக வெளியேறும் ஒகேனக்கல் குடிநீா்

ஒசூரில் மாநகராட்சி அலுவலகம் அருகே பாகலூா் சாலையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீா் வீணாக வெளியேறி வருகிறது.
Published on

ஒசூா்: ஒசூரில் மாநகராட்சி அலுவலகம் அருகே பாகலூா் சாலையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீா் வீணாக வெளியேறி வருகிறது.

ஒசூா் அருகே பாகலூா், பேரிகை பகுதிக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் குழாய் செல்கிறது. இந்தக் குழாயில் திங்கள்கிழமை உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீா் வெளியேறியது. சாலையில் இருந்து நூறு அடி உயரத்துக்கு தண்ணீா் பீய்ச்சி அடித்தது. வேகமாக வெளியேறிய தண்ணீா் பாகலூரில் சாலையில் ஆறாக ஓடியாது. இதனால், பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணாகியது. ஒசூரில் அடிக்கடி இதுபோல நிகழ்வுகள் ஏற்பட்டு பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது. குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சரிசெய்து தண்ணீா் வீணாகி வருவதைத் தடுக்க மாநகராட்சி நிா்வாகம், குடிநீா் வடிகால் வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com