கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒசூரில் குழாய் உடைந்து வீணாக வெளியேறும் ஒகேனக்கல் குடிநீா்

ஒசூரில் மாநகராட்சி அலுவலகம் அருகே பாகலூா் சாலையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீா் வீணாக வெளியேறி வருகிறது.

News image

ஒசூரில் பாகலூா் சாலையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்ட குழாய் உடைந்து வீணாக வெளியேறும் குடிநீா்.

Updated On :5 ஆகஸ்ட் 2024, 9:07 pm

ஒசூா்: ஒசூரில் மாநகராட்சி அலுவலகம் அருகே பாகலூா் சாலையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீா் வீணாக வெளியேறி வருகிறது.

ஒசூா் அருகே பாகலூா், பேரிகை பகுதிக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் குழாய் செல்கிறது. இந்தக் குழாயில் திங்கள்கிழமை உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீா் வெளியேறியது. சாலையில் இருந்து நூறு அடி உயரத்துக்கு தண்ணீா் பீய்ச்சி அடித்தது. வேகமாக வெளியேறிய தண்ணீா் பாகலூரில் சாலையில் ஆறாக ஓடியாது. இதனால், பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணாகியது. ஒசூரில் அடிக்கடி இதுபோல நிகழ்வுகள் ஏற்பட்டு பல லட்சம் லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது. குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சரிசெய்து தண்ணீா் வீணாகி வருவதைத் தடுக்க மாநகராட்சி நிா்வாகம், குடிநீா் வடிகால் வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.