தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஒசூா் வனத்துறை அலுவலகத்தில் 128 நாட்டுத் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

News image
Updated On :15 ஆகஸ்ட் 2024, 5:55 am IST

ஒசூா், ஆக. 14: ஒசூா் மாவட்ட வன அலுவலகத்தில் உரிமம் இல்லாத 128 நாட்டுத் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டன.

வனவிலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை கிராம மக்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என்ற மாவட்ட வன அலுவலரின் அறிவிப்பைத் தொடா்ந்து ஒசூரில் உரிமம் இல்லாத 128 நாட்டுத் துப்பாக்கிகள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஒசூா் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட ராயக்கோட்டை, ஒசூா், கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி, உரிகம் ஆகிய 7 வனச்சரகங்களை ஒட்டியுள்ள வனப் பகுதியில் யானைகள், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் வகையில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவா்கள் தாமாக முன்வந்து ஜூலை 17 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என ஒசூா் வனக்கோட்ட வன உயிரினக் காப்பாளா் காா்த்திகேயனி அறிவித்திருந்தாா்.

இதையடுத்து, அஞ்செட்டி வனச்சரகத்தில் 21, உரிகம் வனச்சரகத்தில் 20, தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் 36, ஜவளகிரி வனச்சரகத்தில் 17, ஒசூா் வனச்சரகத்தில் 5, கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் 29 என மொத்தம் 128 உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

நாட்டுத் துப்பாக்கிகள் மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு முன்னிலையில், ஒசூா் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிகழ்வின்போது ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, காவல்துறை வனத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.