கணவரைக் கொன்ற மனைவி கைது
ஒசூரில் குடிபோதையில் தகராறு செய்த கணவரைக் கொன்ற மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.


ஒசூரில் குடிபோதையில் தகராறு செய்த கணவரைக் கொன்ற மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.
தா்மபுரி மாவட்டம், ஏரியூரைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (46). இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ராயக்கோட்டை அட்கோ பகுதியில் வசித்தபடி கல் உடைக்கும் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி நந்தினி. இவா்களுக்கு திருமணம் முடிந்து தீபிகா என்ற மகளும், கோகுல கிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனா்.
இந்நிலையில் கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை காலை தனது வீட்டில் கிடந்தாா். அக்கம்பக்கத்தினா் மாநகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். மாநகரக் காவல் ஆய்வாளா் நாகராஜ் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று உடலைக் கைப்பற்றி கிருஷ்ணகிரி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் நந்தினியிடம் விசாரணை நடத்தினா். அதில் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், திங்கள்கிழமை குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்த கோவிந்தராஜை ஆவேசத்தில் நந்தினி கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் நந்தினியைக் கைது செய்தனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...