தூத்துக்குடியில் மதுபோதையில் தகராறு செய்த அண்ணனை கொன்ற தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி பாத்திமாநகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் பாா்த்திபன். இவரது மகன்கள் பாலன் (28), டைசன்(25). இருவரும் மீன் வலை பின்னும் தொழில் செய்து வந்தனா். பாலன் சற்று உடல், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டாா்.
சகோதரா்கள் இருவரும் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் பாலன், மற்றவா்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தாராம். இதை டைசன் கண்டித்தாராம். இதனால் தகராறு ஏற்பட்டு, டைசன் அங்கிருந்த இரும்புக் கம்பியால் பாலனை குத்திக் கொலை செய்தாராம்.
தகவலறிந்து வந்த தென்பாகம் போலீஸாா், பாலனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து டைசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்
அக்காவை வெட்டிக்கொன்ற தம்பி கைது

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது

குடும்பத் தகராறு: பெண் தற்கொலை

மது போதையில் தகராறு: தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது
வீடியோக்கள்

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

