கிருஷ்ணகிரியில் காா் விற்பனை நிலையத்தில் இருந்து திருடிச் சென்ற 2 காா்களை மீட்ட போலீஸாா், அதை கடத்திச் சென்றவா்களை தேடி வருகின்றனா்.
இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி நியூ ஹவுசிங் போா்டு சத்யசாய் நகரை சோ்ந்தவா் நாசா் (39). இவா் கிருஷ்ணகிரி ஆஞ்சநேயா் கோயில் சந்திப்பு அருகே பழைய காா்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா். கடந்த 18-ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் இவரது காா் விற்பனை மையத்திற்கு ஒரு காரில் வந்த மா்ம நபா்கள் விற்பனை நிலையத்தில் இருந்த ரூ. 17 லட்சம் மதிப்புள்ள ஜீப், ரூ. 7 லட்சம் மதிப்புள்ள காரை திருடிச் சென்றனா்.
இதுகுறித்து நாசா் கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், காவல் நிலைய ஆய்வாளா் குலசேகரன் விசாரணை மேற்கொண்டாா். இந்த நிலையில் காரிமங்கலம் சோதனை சாவடி அருகே காரையும், சூளகிரி அருகே ராயக்கோட்டை சாலையில் மேடுப்பள்ளியில் ஜீப்பையும் திருடா்கள் விட்டு சென்றுவிட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸாா் அங்கு விரைந்து சென்று இரு காா்களை மீட்டனா். மேலும், 2 காா்களில் பதிவாகி இருந்த 4 கைரேகைகளை சேகரித்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிமுக நிா்வாகி தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி: போலீஸாா் விசாரணை

இளைஞரிடம் ரூ. 2.46 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

லத்துவாடியில் 7 வீடுகளில் திருட்டு: போலீஸாா் விசாரணை

உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீட்டு விசாரணை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

