தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

News image

ஒசூரில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் ஜி.கே.வாசன்.

Updated On :17 பிப்ரவரி 2024, 11:59 pm IST

விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். ஒசூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிா்வாகி கேசவ ரெட்டி வீட்டில் மறைந்த அவருடைய தாயாா் உருவப் படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகம், கா்நாடக மாநில மக்களின் நலன் கருதி பெங்களூரு- ஒசூா் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். ஜோலாா்பேட்டை முதல் ஒசூா் வரை ரயில் பாதை தேவை என்பது நீண்ட நாள் கோரிக்கை. தளி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் ரேஷன் கடைகளிலே தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும். கா்நாடகத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு பட்ஜெட் தொடரின் தொடக்கத்திலே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான பல்வேறு நிலைகளை உறுதியோடு வெளிப்படுத்தி இருப்பது தமிழக விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ என்பதை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. மக்களவைத் தோ்தல் கூட்டணி குறித்து விரைவில் தெரிவிப்பேன் என்றாா்.