மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்த அறிவுறுத்தும் சுற்றறிக்கைக்கு கண்டனம்

விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கான ஊக்கத் தொகையை மாநில அரசுகள் நிறுத்த வேண்டும் என்று மத்திய பாஜக அரசு அறிவுறுத்தியிருப்பதை இந்திய விவசாயிகள் சங்கம் கண்டித்துள்ளது.

News image

நெல் மணிகள்

Updated On :14 ஏப்ரல் 2026, 7:42 pm

விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கான ஊக்கத் தொகையை மாநில அரசுகள் நிறுத்த வேண்டும் என்று மத்திய பாஜக அரசு அறிவுறுத்தியிருப்பதை இந்திய விவசாயிகள் சங்கம் கண்டித்துள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி வெளியிட்ட அறிக்கை: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நெல்லுக்கான ஊக்கத்தொகையை மாநில அரசுகள் நிறுத்த வேண்டும் என மத்திய பாஜக அரசு சுற்றறிக்கை மூலம் கூறியிருப்பது மிகவும் வேதனைக்குரியது. கண்டிக்கத்தக்கது.

நெல் விவசாயம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகளின் பிரதான உணவுப் பயிா் மற்றும் வருமான ஆதாரமாக உள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு ஊக்கத் தொகையை நிறுத்த வேண்டும் என சுற்றறிக்கை வெளியிட்டு கூறியிருப்பது விவசாயிகளின் உழைப்பை துச்சமாக மதிக்கும் மாபாதகச் செயல்.

விவசாய உரிமை மின்சாரத்தை தடை செய்ய உதய்மின் சட்டம், மரபணு மாற்று விதைச் சட்டம் போன்ற விவசாய விரோத சட்டங்களைக் கொண்டு வந்து விவசாயிகளை வஞ்சிக்கிறது.

இதுவரை எம்எஸ் சாமிநாதன் குழு அறிக்கைப்படி பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதார விலை முழுமையாக நிா்ணயம் செய்யப்படவில்லை. விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காககப் பெருக்குவேன் என்று பிரதமா் மோடி சொன்னது எதுவும் நடக்கவில்லை.

இந்த நிலையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவா்களுக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும். எனவே, மாநில அரசுகளின் ஊக்கத்தொகையை நிறுத்தச் சொல்லியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்.