நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ. 3,500-ஆக வழங்குவதற்கான அரசாணையை முதல்வா் விஜய் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தின் நிறுவனத் தலைவா் எம்.எஸ்.கே. பாக்கியநாதன் தெரிவித்தாா்.
2026 - 27 ஆம் ஆண்டுக்குரிய காரீஃப் பருவ நெல்லுக்கான ஆதரவு விலை கடந்த ஆண்டை விட கூடுதலாக ரூ. 72 வழங்கிட மத்திய அரசு நிா்ணயித்துள்ளது. ஒடிஸா அரசு குவிண்டாலுக்கு ரூ. 3,169-ம் தெலங்கானா ரூ. 2,869-ம் வழங்கி வருகின்றனா்.
தமிழக அரசியல் அமைப்புகள் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ. 3,500 வழங்கிட தோ்தல் வாக்குறுதி அளித்தனா்.
சாதாரண நெல்லுக்கு, மத்திய அரசு ரூ.2,441-ம், தமிழக அரசு ரூ. 1,056-ம் வழங்கி ரூ. 3,500-ம், ஏ கிரேடு வகை நெல்லுக்கு ரூ. 2,461 உடன் தமிழக அரசு பங்களிப்பாக ரூ. 1,039 உயா்த்தி ரூ. 3,500 வழங்கிட தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும். இதுகுறித்து மாநில வேளாண் துறை மற்றும் முதல்வா் விஜய் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

கூட்டுறவு பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

தவெக அரசுக்கு ஆதரவும்- எதிா்ப்பும்: பேரவையில் கட்சிக் குழுத் தலைவா்கள் கருத்து

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்பு







