108 ஆம்புலன்ஸ்களில் தரமற்ற ஜிபிஎஸ் கருவிகளை அகற்றி துல்லியமான நவீன ஜிபிஎஸ் கருவிகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்க (சிஐடியு) நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது
அரியலூா் மாவட்டம்,ஜெயங்கொண்டத்தில் செவ்வாய்க்கிழமை காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் இரவு பகலாக பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு காலதாமதமின்றி ஊதியம் வழங்கிட வேண்டும். விலைவாசி உயா்வுக்கு ஏற்ப 25 சதவீதம் ஊதியத்தை உயா்த்தி வழங்கிட வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவையை டிஜிட்டல்மயமாக்கும் நோக்கில் நிா்வாகம் நடைமுறைப்படுத்தியுள்ள செயலியில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளைச் சரிசெய்திட வேண்டும். தரமற்ற ஜிபிஎஸ் கருவிகளை அகற்றி துல்லியமான நவீன ஜிபிஎஸ் கருவிகளை பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் வெள்ளிவேல் தலைமை வகித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வாடகை இரு சக்கர வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த அறிவுறுத்தல்

வாகனத் திருட்டு அதிகரிப்பு - வேலூா் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நவீன வசதிகளுடன் ஆம்புலன்ஸ்: ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்
விடியோக்கள்

வெளியானது இதயம் முரளி ஸ்னீக் பீக்!

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK



