மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி விவசாயி சாவு: கிராம மக்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News image
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
Updated On :29 ஜனவரி 2024, 5:12 am

DIN

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்ட ம், அருகே உள்ளது மகாராஜகடை கிராமம்.  இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சாம்பசிவம் (55) என்பவரை,  ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை தாக்கியது.  

இதில் பலத்த காயம் அடைந்த அவர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.  

தகவல் அறிந்த காவல்துறையினர்,  வனத்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.  கடந்த சில நாள்களாக இந்தப் பகுதியில் காட்டு யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தோம், நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.