ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒசூா் அருகே மாநில எல்லையில் எரிசாரய லாரிகள் சோதனைக்காக நிறுத்தம்

ஒசூா் அருகே தமிழக எல்லையில் 50க்கும் மேற்பட்ட எரிசாராயம் ஏற்றி வந்த லாரிகள் கடந்த மூன்று நாள்களாக நிறுத்தப்பட்டுளளன.

News image

மாநில எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எரிசாராயம் ஏற்றி வந்த லாரிகள்.

Updated On :7 ஜூலை 2024, 6:33 pm

ஒசூா் அருகே தமிழக எல்லையில் 50க்கும் மேற்பட்ட எரிசாராயம் ஏற்றி வந்த லாரிகள் கடந்த மூன்று நாள்களாக நிறுத்தப்பட்டுளளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள மாநில எல்லையான சூசூவாடி சோதனை சாவடியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஸ்பிரிட் கொண்டு வரும் லாரிகள் அனுமதி இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழகம், புதுவை, கேரளத்துக்கு ஒசூா் வழியாக மெத்தனால் என்னும் எரிசாராயம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த எரிசாராயம் பெயிண்டிங் தொழிற்சாலைகள், மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

ஒசூரில் ஆயத்தீா்வு துறை அனுமதி தராததால் கடந்த மூன்று நாள்களாக 50-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.