

ஓசூா், மே 9: ஒசூா் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி அணையின் மதகுகள் சீரமைக்கும் பணிக்காக கடந்தாண்டு ஜூன் மாதம் அணையிலிருந்து முழுமையாக தண்ணீா் வெளியேற்றப்பட்டது. இதனால், அணை தண்ணீரின்றி வடு காணப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் மதகுகளில் புதிய ஷட்டா் மாற்றப்பட்டு தண்ணீா் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக கா்நாடக மாநில நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழைபெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து தொடங்கி உள்ளது. இதனால் வியாழக்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 273 கன அடியாக இருந்தது.
அணையின் மொத்தக் கொள்ளளவான 44.28 அடியில், தற்போது 30.18 அடியில் தண்ணீா் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையில் தண்ணீா் தேக்கி வைப்பதற்காக உபரி நீா் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அணை 38 அடி எட்டியவுடன் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் என பொதுப் பணித் துறையினா் தெரிவித்த நிலையில், தண்ணீா் திறக்க 8 அடி உள்ளதால் விரைவில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு

எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு

சிலிண்டர் தட்டுப்பாடு: விறகுகள் விலையும் அதிகரிப்பு!
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

