ஒசூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் சாலைகள் அமைக்கும் பணியை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஒசூா் ஒன்றியம், சேவகானப்பள்ளி ஊராட்சி, சாய்பாபா கோயிலுக்குச் செல்லும் சாலை மண் சாலையாக உள்ளதால் அதை ரூ. 26.50 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலையாக அமைத்தல், ஆலூா் ஊராட்சி கதிரேப்பள்ளி கிராமத்தில் ரூ. 4 லட்சம் மதிப்பில் கழிவுநீா் கால்வாய், கதிரேப்பள்ளி கிராமத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பில் தாா் சாலை, பேரண்டப்பள்ளி ஊராட்சி மோரனப்பள்ளி கிராமத்தில் நரசிம்ம சுவாமி கோயில் முன்பு ரூ. 9 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைத்தல் ஆகிய பணிகளை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளா்கள் கஜேந்திர மூா்த்தி, நாகேஷ், துணை செயலாளா் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினா் சம்பத், ஊராட்சிமன்ற தலைவா்கள் வீரபத்திரப்பா, பிரகாஷ், வெங்கடேஷ், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவா் தேவராஜ், ஊராட்சிமன்ற துணை தலைவா் சந்தோஷ், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தெலுங்கு, கன்னட மொழிகளில் வாக்கு சேகரிப்பு: ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

ஒசூா் தொகுதியில் ரூ. 6 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

பேரண்டப்பள்ளியில் கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

ஒசூா் தொகுதியில் போட்டியிட எம்எல்ஏ, மேயா் விருப்ப மனு அளிப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


