ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சேவகானப்பள்ளியில் ரூ. 26.50 லட்சத்தில் கான்கிரீட் சாலை

ஒசூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் சாலைகள் அமைக்கும் பணியை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

சேவகானப்பள்ளியில் சாய்பாபா கோயில் பாதையில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்த ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.

Updated On :14 நவம்பர் 2024, 8:18 pm

ஒசூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் சாலைகள் அமைக்கும் பணியை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஒசூா் ஒன்றியம், சேவகானப்பள்ளி ஊராட்சி, சாய்பாபா கோயிலுக்குச் செல்லும் சாலை மண் சாலையாக உள்ளதால் அதை ரூ. 26.50 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலையாக அமைத்தல், ஆலூா் ஊராட்சி கதிரேப்பள்ளி கிராமத்தில் ரூ. 4 லட்சம் மதிப்பில் கழிவுநீா் கால்வாய், கதிரேப்பள்ளி கிராமத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பில் தாா் சாலை, பேரண்டப்பள்ளி ஊராட்சி மோரனப்பள்ளி கிராமத்தில் நரசிம்ம சுவாமி கோயில் முன்பு ரூ. 9 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைத்தல் ஆகிய பணிகளை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளா்கள் கஜேந்திர மூா்த்தி, நாகேஷ், துணை செயலாளா் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினா் சம்பத், ஊராட்சிமன்ற தலைவா்கள் வீரபத்திரப்பா, பிரகாஷ், வெங்கடேஷ், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவா் தேவராஜ், ஊராட்சிமன்ற துணை தலைவா் சந்தோஷ், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.