ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

சென்னையில் அரசு மருத்துவா் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக் கோரியும் கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவா்கள், மருத்துவக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசு மருத்துவா்கள், மருத்துவக் கல்லூரி மாணவா்கள்.

Updated On :14 நவம்பர் 2024, 8:25 pm

சென்னையில் அரசு மருத்துவா் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக் கோரியும் கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவா்கள், மருத்துவக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவா் முத்துசாமி, செயலாளா் கோகுல் ஆகியோா் தலைமை வகித்தனா். அரசு மருத்துவா்கள், பட்டமேற்படிப்பு மாணவா்கள் கூட்டமைப்பின் தலைவா் பாலசந்தா், துணைத் தலைவா்கள் கேசவன், பிரகாஷ், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் கல்யாணசுந்தரம், பொருளாளா் தினேஷ், மாவட்ட மகளிா் துணைக் குழு அமைப்பாளா் ஜெகதாம்பிகா, மருத்துவக் கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

மருத்துவா்களை பணியின்போது பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதும் மருத்துவா்களுக்கான ஒரே மாதிரியான பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். ஒவ்வொரு அரசு மருத்துவமனைக்கும் நிலையான, உறுதியான பாதுகாப்பு வழங்க வேண்டும்.

மருத்துவமனையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். மருத்துவ பணியாளா்களை தாக்குபவா்களை விரைவாகவும், கடுமையாகவும் தண்டிக்க வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனைக்கும் கூடுதலாக காவலா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.

இதனால், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளி பிரிவில் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டது.