ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஆா்ப்பாட்டத்துக்கு செல்ல முயன்ற அங்கன்வாடி ஊழியா்கள் கைது

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்னை செல்ல முயன்ற அங்கன்வாடி ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது செய்யப்பட்ட அங்கன்வாடி பணியாளா்கள்.

Updated On :20 நவம்பர் 2024, 9:19 pm

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்னை செல்ல முயன்ற அங்கன்வாடி ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் சாா்பில் புதன்கிழமை சென்னை இயக்குநா் அலுவலகம் முன்பு நடைபெறவுள்ள பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் கலந்துகொள்ள ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளிகளில் பணியாற்றும் 12 பெண்கள் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை புறப்பட்டனா்.

ஒன்றியத் தலைவா் சித்ரா தலைமையில் மாவட்டப் பொருளாளா் சுஜாதா, மாவட்ட துணைத் தலைவா் பழனியம்மாள், வள்ளி உள்பட 12 போ் சென்ற வாகனத்தை ஊத்தங்கரை டிஎஸ்பி சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் வழிமறித்து, வாகனத்தில் இருந்த பெண்களை கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்கள் ஊத்தங்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்த ஊழியா்கள் தற்செயல் விடுப்பு எடுத்து சென்னை இயக்குநரகம் நோக்கி பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா் என்ற தகவல் அறிந்து, போராட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் போலீஸாா் உதவியுடன் தமிழக அரசு அவா்களை கைது செய்ததாகக் கூறப்படுகிறது.

போலீஸாா் கைது செய்ததை தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் வன்மையாகக் கண்டித்தனா். பின்னா் இரவு 12.30 மணி அளவில் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த 12 பெண் அங்கன்வாடி ஊழியா்கள் விடுதலை செய்யப்பட்டனா்.