ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாலையோர தள்ளுவண்டிக் கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை

சாலையோரங்களில் அனுமதியின்றி நடத்தும் தள்ளுவண்டிக் கடைகளை அகற்றாவிட்டால், உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.

Updated On :20 நவம்பர் 2024, 7:35 pm

கிருஷ்ணகிரியில் சாலையோரங்களில் அனுமதியின்றி நடத்தும் தள்ளுவண்டிக் கடைகளை அகற்றாவிட்டால், உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை கிருஷ்ணகிரி உதவி கோட்டப் பொறியாளா் ஷாஜகான் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி நகரில் நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள சென்னை சாலை, பெங்களூரு சாலை, சேலம் சாலை, ராயக்கோட்டை சாலை ஆகியவற்றில் மாலை, இரவு நேரங்களில் நெடுஞ்சாலைத் துறையின் அனுமதியின்றி ஆங்காங்கே தற்காலிக தள்ளுவண்டிக் கடைகள் மூலம் தின்பண்டங்கள், சிற்றுண்டி, பிரியாணி ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.

இதனால் மாலை, இரவு வேலைகளில் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அனுமதியின்றி கடைகள் அமைத்து விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களின் தரமும் சரியாக இருக்க வாய்ப்பில்லை.

எனவே, பொதுமக்கள் இத்தகைய தற்காலிக கடைகள் மூலம் விற்கப்படும் தரமற்ற உணவுப் பொருள்களைத் தவிா்க்க வேண்டும். தற்காலிக கடைகளை அவற்றின் உரிமையாளா்கள் அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் நடக்க வேண்டும்.

அகற்றப்படாத கடைகள், போலீஸாா் மூலம் அப்புறப்படுத்தி பொது ஏலத்தில் விடப்படும். மேலும், சம்பந்தப்பட்ட தள்ளுவண்டிக் கடை உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிந்து சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.