தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை பணிகள்: சேலம் கண்காணிப்பு பொறியாளா் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்ட நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உள்கோட்டத்திற்கு உள்பட்ட சாலை பணிகளை சேலம் கண்காணிப்பு பொறியாளா் சசிகுமாா் அண்மையில் ஆய்வு செய்தாா்.

Updated On :28 நவம்பர் 2024, 8:30 pm

கிருஷ்ணகிரி மாவட்ட நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உள்கோட்டத்திற்கு உள்பட்ட சாலை பணிகளை சேலம் கண்காணிப்பு பொறியாளா் சசிகுமாா் அண்மையில் ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் முதல் கிருஷ்ணகிரி அணை செல்லும் சாலையான கால்வேஹள்ளி சாலை, தோ்பட்டி, தளிபட்டி கிருஷ்ணகிரி - ராணிப்பேட்டை சாலை முதல் அச்சமங்கலம் செல்லும் சாலையில் உள்ள சத்தலப்பள்ளி சாலை ஆகியவற்றின் திட்டம், திட்டம் சாரா பணிகளின் நீளம், அகலம் ஆகியவற்றை தாா் சாலையை வெட்டி எடுத்து பரிசோனை செய்தாா். அதைத் தொடா்ந்து மழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், புதிய சாலை பணிகளை விரைவுபடுத்தும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

அப்போது, கிருஷ்ணகிரி கோட்ட பொறியாளா் திருலோகசுந்தா், உதவி கோட்டப்பொறியாளா் அன்புஎழில், உதவி பொறியாளா்கள் பிரவின்குமாா், அன்பரசன் மற்றும் சாலை ஆய்வாளா்கள், சாலை பணியாளா்கள் உடனிருந்தனா்.