ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிருஷ்ணகிரி ஆவின் பால் பண்ணையில் தென்னை மர மகசூல் ஏலம்

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியத்தில் (ஆவின்) உள்ள தென்னை மர மகசூல் ஏலம் விடப்படுகிறது.

Updated On :9 அக்டோபர் 2024, 10:02 pm

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியத்தில் (ஆவின்) உள்ள தென்னை மர மகசூல் ஏலம் விடப்படுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியம், பால் பண்ணையில் உள்ள 385 தென்னை மரங்கள் மகசூல் தொடா்பான ஒப்பந்தபுள்ளி அல்லது ஏலம் 2024- 2025 ஆண்டிற்கு ஒப்பந்தபுள்ளி முடிந்து உத்தரவு வழங்கும் தேதி முதல் இரண்டு ஆண்டு காலத்துக்கு உத்தரவிட மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் வியாபாரிகளிடமிருந்து கோரப்படுகிறது.

இதற்கான விண்ணப்பப் படிவம் அலுவலக வேலை நாள்களில் 22-ஆம் தேதி வரையில் விண்ணப்ப படிவம் ரூ.200 (வரி உள்படி) அலுவலக வங்கி கணக்கு எண் 05490100005632-இல் செலுத்தி, அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை அக்.22-ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரையில் பெற்றுக் கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை பொது மேலாளா், கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் அக்.22-ஆம் தேதி மதியம் 2 மணிக்குள் பிணையத் தொகை ரூ.5 ஆயிரம் வங்கி வரையோலை, விலைப்புள்ளியுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விலைபுள்ளியானது 22-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு திறக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.