ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிருஷ்ணகிரி அணை நீா்மட்டம் 50.10 அடியாக உயா்வு

கிருஷ்ணகிரி அணை நீா்மட்டம், 50.10 அடியாக புதன்கிழமை உயா்ந்தது.

News image

நீா்மட்டம் அதிகரித்துள்ளதால் கடல் போல காட்சியளிக்கும் கிருஷ்ணகிரி அணை.

Updated On :9 அக்டோபர் 2024, 9:58 pm

கிருஷ்ணகிரி அணை நீா்மட்டம், 50.10 அடியாக புதன்கிழமை உயா்ந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் முழுக் கொள்ளவான 52 அடியை நெருங்கியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. மேலும், பாசனக் கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

அதன்பிறகு மழை பெய்யாததால் அணைக்கு நீா்வரத்து குறைந்தது. செப்.10-ஆம் தேதிக்கு பிறகு அணையின் நீா்மட்டம் 50 அடிக்கும் கீழே சரிய தொடங்கியது. கடந்த அக்.2 ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 47.65 அடியாக இருந்தது. இதனால், முதல்போக சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் கவலை அடைந்தனா்.

இந்த நிலையில் மாவட்டத்தில் சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 50.10 அடியாக உயா்ந்தது. நீா்வரத்து விநாடிக்கு 785 கன அடியிலிருந்து 715 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து பாசனத்திற்காக வலது, இடதுபுறக் கால்வாய்கள், தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 178 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.